+2 முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு- TNPSC அறிவிப்பு

தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பதவிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தடய அறிவியல் துறையில் 56 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் (எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, டிஎன்சி) ஆதரவற்ற விதவைகளுக்கும் (பொதுப்பிரிவு உட்பட) வயது வரம்பு இல்லை.
எழுத்துத் தேர்வு மே 6ல் நடத்தப்படும். எழுத்துத்தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். நேர்முகத் தேர்வு இல்லை. தகுதியானோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி பிப்ரவரி 21-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பாடத்திட்டம், கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

நீங்கள் வாட்ஸ் ஆப் பயனாளரா ? உங்களுக்கு காத்திருக்கிறது ஆபத்து


சமீபமாக ஒரு செய்தி இணையங்களில் பகிரப்பட்டு வருகிறது. வாட்ஸ் ஆப் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் வசதி கூடிய சீக்கிரம் அனைத்து பயனாளர்களுக்கு அப்டேட்ஸ் மூலம் கிடைக்கும் என்று. ஒரு பக்கம் இது நல்ல பயனுள்ள வசதி போன்று தோணலாம்.
தற்போதைக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்ய கமிஷன் இலவசமாக அல்லது குறைந்த விழுக்காடு உள்ளது. ஒவ்வொரு வங்கி மற்றும் ஆப்களுக்கு ஏற்ப இது மாறுகிறது. பயனாளர்கள் இந்த வசதிகளுக்கு அடிமையான பின்பு அந்த வரி விகிதத்தை அதிகப் படுத்தினால் என்ன ஆகும் என யோசித்து பாருங்கள் ? ஏற்கனவே வரி என்ற பெயரில் நாம் சம்பாறிக்கும் பணம் இங்கு போகிறது என புரியாமல் தவிக்கின்றனர் மக்கள். இதில் பண பரிமாற்றத்தில் கூட வரி விதிக்கப்பட்டால் மக்களின் நிலை என்ன ஆகும் ? பே டீ யம் போன்ற கம்பெனிகள் லாபம் சம்பாதிக்க நாம் உழைப்பு தான் கிடைத்ததா ?
இது குறித்த உங்கள் கருத்துகளை கீழே கமெண்ட் செய்யுங்கள். பயனுள்ளதாக கருதினால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்.

பிப்ரவரி 20 ல் வருகிறது நாகினி பார்ட் 2! ஆனால் எந்த சேனலில் தெரியுமா!

தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய ஹிந்தி டப் சீரியல்களில் ஒன்று நாகினி. தன் பெற்றோரைக் கொன்றவர்களைப் பழிவாங்க துடிக்கும் இச்சாதாரி நாகங்கள் பற்றிய இத்தொடர் சன் குழுமத்தின் சன் டிவியில் ஒளிபரப்பாகி தமிழகத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இதனை ஹிந்தியில் கலர்ஸ் எனும் டிவி சேனல் ஒன்று ஒளிபரப்பி வருகிறது. தற்பொழுது அங்கே நாகினியின் மூன்றாவது பகுதி  இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில், அதன் இரண்டாம் பகுதி  ஒளிபரப்பை, தமிழில் எதிர் நோக்கிக் காத்திருகின்றனர் சீரியல் ரசிகர்கள்.

இந்நிலையில் நாகினியின் இரண்டாம் பாகத்தை 'வியாகாம் 18' நிறுவனத்தின்  'கலர்ஸ் தமிழ்' எனும் புதிதாக களம் காண இருக்கு சேனல் ஒன்று, வருகிற பிப்ரவரி 20ம் தேதியிலிருந்து, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்ப உள்ளது.
இந்த தகவலை கலர்ஸ் தமிழ் நிறுவனம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. நாகினி மட்டுமல்லாது நடிகர் ஆர்யா தொகுத்து வழங்கும் 'எங்கள் வீட்டு மாப்பிள்ளை', நடிகர் சிவா தொகுத்து வழங்கும் 'சூப்பர் கிட்ஸ்' ஆகிய நிகழ்சிகளும் இந்த சேனலில் ஒளிபரப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உச்சகட்ட கோபத்தில் தளபதி ரசிகர்கள் காரணம் தெரியுமா


எஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்றாவது முறையாக தளபதி இனைந்துள்ளார். துப்பாக்கி கத்தி படத்திற்கு பிறகு இக்கூட்டனி இனைந்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது ஒரு செய்தி வைரலாகி வருகிறது இப்படத்தின் படத்தின் படபிடிப்பு கொல்கத்தவில் நடக்கிறது அப்போது ஷீட்டிங்கில் எடுத்த ஒரு சண்டை காட்சி இனையதளத்தில் பரவிவருகிறது. அந்த காட்சி பைரவா படத்தின் சாயலில் இருப்பதால் அதை எடிட் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். தளபதி 62 பத்தி நீங்கிறிங்கன்னு கமெண்ட் பண்ணுங்க.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விஜய் 62 பட தலைப்பு !


விஜய்-முருகதாஸ் இணைய விஜயின்-62வது படத்திற்கான சூட்டிங் தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் விஜய்-62 படத்தின் தலைப்பு ‘அல்லு’ என சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஆனால் தற்போது வரை படத்தின் தலைப்பிற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் – முருகதாஸ் இணைந்து முன்னர் துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய படங்கள் எடுக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களின் தலைப்பும் ஒரு ‘ஆயுதத்தின்’ பெயராகும். இதனால் விஜய்-52விற்கும் ஒரு ஆயுதத்தின் பெயரே தலைப்பாக இருக்கும் என்ற ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் அறிய-FOLLOW- பட்டனை கிளிக் செய்யவும்.

கல்லூரியில் படித்துக்கொண்டே பணம் சம்பாதிக்க 3 ஈஸி வழிகள்!



கல்லூரி காலங்களில் கையில் பணம் இல்லாவிட்டால் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், தொழில் முறையுடன் கூடிய பல திறமைகள் நம்மிடையே இருந்தால், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே நாம் சம்பாதிக்க முடியும். அதில், ஈஸியான 3 வழிகளைக் காணலாம்.
1. டியூஷன் எடுக்கலாம்:
பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பது மிகவும் நல்ல யோசனை. ஏனெனில், இதன் மூலம் பணம் கிடைப்பது மட்டுமல்லாமல், எப்போதும் உங்களை அப்டேட்டாகவும், அடிப்படை பாடங்களை ஞாபகம் வைத்திருக்கவும் முடியும். பள்ளி குழந்தைகளுடன் பழகுவதன் மூலம் நீங்கள் புத்துணர்ச்சியும் அடையலாம். மற்றவர்களுக்கு சில விஷயத்தை புரிய வைக்கும் திறனை இதன்மூலம் வளர்த்துக் கொள்ளலாம். ஒரு விவாதத்தை மற்றவர்கள் புரிந்துகொள்ளும் விதமாக நீங்கள் எப்படி எடுத்துச் செல்கிறீர்கள் என்பதை அறியலாம்.
2. பகுதிநேரமாக எழுதலாம்:
நீங்கள் நன்றாக எழுதும் பழக்கம் உடையவராக இருந்தால், செய்தித்தாள்கள், இதழ்கள், ஆகியவற்றில் பகுதிநேரமாக, அதாவது ஃப்ரீலான்சராக எழுதி அதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம். காலையில் சென்று அலுவலகத்தில் அமர வேண்டிய தேவை இதில் இல்லை. எழுதுவதில் உள்ள சில நுணுக்கங்களை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.
3. பங்கு சந்தை முதலீடு:
கல்லூரி காலத்தில் இளம் வயதிலேயே பங்குச்சந்தையில் முதலீடு செய்வது, பணத்தை சேமிப்பதன் அவசியத்தை உணர்த்துவதாக அமையும். பங்குச்சந்தையில் முதலீடு செய்வது சூதாட்டமல்ல. திறன்வாய்ந்த பொருளியல் நிபுணரின் ஆலோசனையுடன் பங்கு சந்தையில் முதலீடு செய்தால், எதிர்காலத்தில் நல்ல லாபத்தை பெற முடியும். பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மூலம், வணிகம், தொழில் சார்ந்தவற்றின் மீதான் அறிவு வளர்ந்து அதன்மீது ஆர்வம் கூடும்.

சமந்தாவுக்கு வந்த கூட்டம் சன்னிலியோனுக்கு வராதது ஏன்?


பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனின் கலை நிகழ்ச்சி ஒன்று நேற்று சென்னை அருகேயுள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்றது.
சன்னிலியோன் மற்றும் ஆண்ட்ரியா நடத்தும் கலைநிகழ்ச்சி என்பதால் இந்த நிகழ்ச்சியை காண சுமார் 3000 பேர் வரை வரும் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இதனால் டிக்கெட்டின் விலை ரூ.8000 மற்றும் ரூ.5000 என்று உயர்த்தப்பட்டது.
ஆனால் டிக்கெட் விலை அதிகம் என்ற காரணத்தாலா? அல்லது வேறு காரணமாகவா? என்று தெரியவில்லை, இந்த நிகழ்ச்சியை காண குறைந்த அளவு ரசிகர்களே வருகை தந்திருந்தனர். இதனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடை திறப்பு விழாவுக்கு வருகை தந்த சமந்தாவை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால், ரசிகர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

+2 முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு- TNPSC அறிவிப்பு

தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பதவிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொ...