+2 முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு- TNPSC அறிவிப்பு

தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பதவிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தடய அறிவியல் துறையில் 56 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் (எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, டிஎன்சி) ஆதரவற்ற விதவைகளுக்கும் (பொதுப்பிரிவு உட்பட) வயது வரம்பு இல்லை.
எழுத்துத் தேர்வு மே 6ல் நடத்தப்படும். எழுத்துத்தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். நேர்முகத் தேர்வு இல்லை. தகுதியானோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி பிப்ரவரி 21-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பாடத்திட்டம், கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

+2 முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு- TNPSC அறிவிப்பு

தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பதவிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொ...